Breaking News

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் -ஜேவிபி கோரிக்கை

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பேசிப்­பேசி காலத்தை கடத்­தாது அவர்­களின் விடு­த­லையை உறு­தி­ப் ப­டுத்த வேண்டும். புலி­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் போது அப்­பாவி தமி­ழர்கள் சிறை­களில் இருப்­பது நியா­ய­மற்­ற­தாகும் என மக்கள் விடு­தலை முன்­னணி சாடி­யுள்­ளது.

புலம்­பெயர் இலங்­கை­யர்­களை உட­ன­டி­யாக நாட்­டுக்குள் அனு­ம­திக்க வேண்டும் எனவும் அக்­கட்சி தெரி­வித்­தது. அர­சியல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கக்­கோரி எதிர்க்­கட்சி தலைவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டைதெரிவிக்கும்­போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

யுத்தம் முடி­வ­டைந்த கால கட்­டத்தில் இருந்து அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பல்­வேறு தரப்­பு­க­ளினால் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்­துள்­ளது. குறிப்­பாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் அதி­க­ள­வி­லான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் கையா­ளப்­பட்­டது. இது ஒரு கட்­டத்தில் நாட்டை பாது­காக்கும் வகையில் இருந்­தாலும் யுத்தம் முடி­வ­டைந்தும் தொடர்ச்­சி­யாக இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சியை தக்­க­வைக்க முயற்­சித்­தனர். அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் சந்­தே­கத்தின் பேரிலும் பலர் கைது செய்­யப்­பட்­டனர். சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நாம் அப்­போதும் அழுத்தம் கொடுத்தோம்.

அதேபோல் ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் புதிய ஆட்­சியில் அர­சியல் கைதி­களை விடு­விக்­கக்­கோரி அழுத்தம் கொடுக்­கப்­ப­பட்டு வந்­துள்­ளது. அவர்­க­ளது விடு­தலை தொடர்பில் தொடர்ச்­சி­யாக கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. நாமும் பல சந்­தர்ப்­பங்­களில் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அழுத்தம் கொடுத்­துள்ளோம். அதேபோல் சிவில் அமைப்­பு­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஒரு­சில கட்­சி­களும் இந்த விட­யங்கள் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்­துள்­ளன. எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனும் இந்த விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். ஆனால் இவர்­களின் விடு­தலை தொடர்பில் இன்­று­வ­ரையில் எந்த வித­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ள­தாக தெரி­ய­வில்லை.

இலங்கை தொடர்பில் எழுந்த சர்­வ­தேச அழுத்­தங்­களில் முக்­கி­ய­மாக அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பிலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச அழுத்­தங்கள் பல­ம­டையும் சந்­தர்ப்­பத்­திலும், இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச நட­வ­டிக்­கைகள் பல­ம­டையும் சந்­தர்ப்­பங்­களில் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தாக தெரி­விப்­ப­வர்கள் அதன் பின்னர் அவை தொடர்பில் கதைப்­ப­தையே மறந்­து­வி­டு­கின்­றனர்.

விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் தலை­வர்கள், முக்­கிய உறுப்­பி­னர்கள் என தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் இன்று அர­சியல் பலத்­து­டனும் அதி­கார பலத்­து­டனும் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். ஆனால் விடு­தலைப் புலி­க­ளுக்கு உணவு கொடுத்­த­வர்கள், தண்ணீர் கொடுத்­த­வர்கள் என சாதா­ரண அப்­பாவி மக்­களை கைது­செய்து இன்­று­வரை தடுப்புக் காவலில் வைத்­துள்­ளனர். கடந்த ஆட்­சியின் போது பாது­காக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களின் தலை­வர்­களை இந்த அர­சாங்­கத்­திலும் பாதுகாக்கின்றமை வெட்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். ஆகவே தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்­கொண்டு இருப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை. உட­ன­டி­யாக இவர்­களை விடு­தலை செய்யும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும்.

அதேபோல் புலம்­பெயர் இலங்­கை­யர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். யுத்த காலகட்டத்தில் மட்டும் அல்லாது யுத்தத்துக்கு பின்னரான ஐந்து ஆண்டுகளிலும் இலங்கையில் இருந்து பலர் வெளியேறினர். அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பது அவசியமான ஒன்றாகும். இனியும் புலிக் கதைகளை கூறிக்கொண்டு இருப்பதனால் எந்தவித மாற்றங்களும் நடக்கப்போவதில்லை என்றார்.