Breaking News

தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்­களை சமர்ப்­பிக்க பணிப்பு

சிறைச்­சா­லை­களில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்­க­ளையும் அவர்­களின் விசா­ரணை தொடர்­பான நிலைமை குறித்த அறிக்­கை­யையும் நாளை புதன்­கி­ழமை சமர்ப்­பிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடிய அமைச்­சர்கள் குழுக் கூட்­டத்தில் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று அலரி மாளி­கையில் விசேட கூட்டம் இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, மனோ கணேசன், டி.எம்.சுவா­மி­நாதன், சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் எனப் பலரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினை எடுக்­கலாம் என்­பது குறித்து ஆரா­யப்­பட்­டது. சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்­க­ளையும் அவர்­களின் வழக்கு விசா­ரணை தொடர்­பான நிலைமை குறித்தும் விரி­வான அறிக்­கையை நாளைய தினம் சமர்ப்­பிக்­கு­மாறு சிறைச்­சா­லைகள் அமைச்­சிற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

கைதி­களின் விப­ரங்­களை பெற்ற பின்னர் நாளை மீண்டும் இந்தக் குழு கூடி அது­கு­றித்து ஆராய்­வது என்றும் நேற்­றைய கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தம்மை விடு­விக்கக் கோரி தமிழ் அர­சியல் கைதிகள் கடந்த ஐந்து தினங்­க­ளாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அர­சாங்­கத்தின் உறு­தி­மொ­ழியை அடுத்து இவர்கள் தமது போராட்­டத்தை தற்­கா­லி­க­மாகக் கைவிட்­டுள்­ளனர். கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கைதி­களின் போராட்டம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து பிர­தமர் தலை­மையில் அமைச்சர்கள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து விசேட கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுக் கூட்டமே நேற்று நடைபெற்றிருக்கிறது.