Breaking News

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடாதென அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறித்து நாம் அறியோம்!

இலங்கை வந்­துள்ள காணாமல் போனோர் தொடர்­பான ஐ.நா. செயற்­கு­ழுவை சந்­திக்கும் பாதிக்­கப்­பட்டோர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டக்­கூ­டாது என அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நாங்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்று ஐக்­கிய நாடுகள் செய­லாளர் பான் கீ மூனின் செய­லாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரி­வித்­துள்ளார்.

நியூ­யோர்க்கில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் குறித்த செயற்­கு­ழு­வா­னது பல்­வேறு பகு­தி­க­ளிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது.

இந்­நி­லையில் அவ்­வாறு ஐ.நா. குழுவை சந்­திக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டக்­கூ­டாது என அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றமை தொடர்­பாக வின­விய போதே பான் கீ மூனின் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

'' இவ்­வாறு இலங்­கை­யி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தின் ஊடாக ஏதா­வது அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளதா என நான் அறிந்­தி­ருக்­க­வில்லை"" என்று ஸ்டீபன் டுஜாரிக் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் தொடர்­பான செயற்­கு­ழுவின் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

அதன் பின்னர் கலந்­து­ரை­யா­டலை முடித்­து­விட்டு வெளியே வந்த சந்­தி­யா­விடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­ய­போது தான் எந்­த­வித கருத்­தையும் கூற­வி­ரும்­ப­வில்லை என்று கூறி­விட்டு சென்­றி­ருந்தார். அது மட்­டு­மன்றி ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட வேண்­டா­மென ஐ.நா. பிர­தி­நி­திகள் தன்­னிடம் கூறி­ய­தா­கவும் சந்­தியா எக்­னெ­லி­கொட தெரி­வித்­தி­ருந்தார்''

எமது சந்­திப்பு சிறப்­பாக அமைந்­தது. எனது கவ­லை­களை அவர்­க­ளிடம் எடுத்துக் கூறினேன் . இது தொடர்­பான எமது நிலைப்­பாட்டை அடுத்­த­வாரம் ஐ.நா. செயற்­குழு அறி­விக்கும்'' என்று குறிப்­பிட்­டி­ருந்தார். யார். இவ்­வாறு ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­ட­வேண்டாம் என்று கூறி­யது என எழுப்­பப்­பட்ட கேள்­விக்கும் சந்­தியா எக்­னெ­லி­கொட பதி­ல­ளிக்­க­வில்லை.

இந்­நி­லையில் நியூ­யோர்க்கில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­யலா ளர் கேள்வி எழுப்­பு­கையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் செயற்­குழு இலங்­கைக்கு சென்­றுள்­ளது. அவர்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்­றனர். ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட முடி­யாது என சந்­திப்பில் கலந்து கொண்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இவ்­வாறு ஏதா­வது அறி­வு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளதா? என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த பான் கீ மூனின் பேச்சாளர் டுஜாரிக் எனக்குத் தெரியாது குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி:- அவ்வாறு ஏதாவது அறிவுறுத்தல்கள் ஏற்கனவே உள்ளனவா?

நீங்கள் இதனை ஜெனிவா பிரதிநிதிகளிடம் கேட்கலாம். இது நான் இங்கிருந்து பதில ளிக்கக் கூடிய கேள்வியல்ல.