Breaking News

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பு



தமிழ் மக்கள் பேரவையின் அறிமுகக்கூட்டமும் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலான மக்கள் கருத்தறியும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக உறுப்பினர் வி. தேவராசா தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் துணைத் தலைவர்களில் ஒருவரான ரி. வசந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நிபுணர் குழுவைச் சேர்ந்த சட்டத்தரணிகளான புவிதரன், காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் மற்றும் அதன் தீர்வுத்திட்ட வரைவு தொடர்பில் பொது மக்களால் கேள்விகள் எழுப்பட்டதுடன் அதற்கான பதில்களும் நிபுணர்குழுவால் வழங்கப்பட்டடிருந்தது.