Breaking News

முல்லைத்தீவு – கோட்டபாய முகாமிற்கு நிரந்தர வேலியமைக்கும் இராணுவம்

முல்லைத்தீவு – வட்டுவாகலிலுள்ள கோட்டபாய முகாமிற்கான நிரந்தர வேலி அமைக்கும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டுவாகல் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு பொதுமக்களால் பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.இருந்தபோதும், இந்த முகாமிற்கான நிரந்தர வேலி அமைக்கும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு தினங்களாக நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுபீகரிக்கும் நடவடிக்கை முல்லைத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துவரும் நிலையில், பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இராணுவத்தின் இந்த செயற்பாட்டிற்கு பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.