Breaking News

பொட்டு அம்மான் விரைவில் கைது செய்யப்படுவார்!



சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையில், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுத் துறை முக்கிய நபரான தலேஅரிசன் என்பவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒருவர் அல்லவென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை இச்சம்பவம் தொடர்பில் புலிகள் அமைப்பின் 4 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இத் தற்கொலை அங்கி விவகாரத்தின் பின்னனியல் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இருப்பதாகவும் அவரையும் விரைவில் தேடி கைது செய்வோம் எனவும் இலங்கை காவல்துறை கூறியதாகவும் சிங்களப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.