Breaking News

மகிந்த ஆட்சியில் நடந்த கசப்புக்கள் புத்தக வடிவில்



கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சித் தர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

” உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தற்­போ­தைய செயற்­பா­டுகள் மற்றும் சவால்கள் ” என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை மன்றக் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இக் கருத்­த­ரங்கில் மாகாண சபை ஆளு­நர்கள், முத­ல­மைச்­சர்கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்­பி­னர்கள், செய­லா­ளர்கள், உயர் அதி­கா­ரிகள் உட்­பட பலர் கலந்துகொண்­டனர். இந்த ஒருநாள் கருத்­த­ரங்கு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் பிரி­யங்க ஜெய­ரட்ண ஆகியோரின் ஏற்­பாட்டில் இடம்பெற்றது.

இந்த கருத்­த­ரங்கின் இறு­தியில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன்­போது கருத்­த­ரங்கில் எடுக்­கப்­பட்ட தீர்­மான அறிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­யிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா கைய­ளித்தார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இலங்­கையில் நிறை­வேற்­ற­தி­காரம் இரண்டு பிரி­வி­ன­ருக்கே உள்­ளது. ஒன்று ஜனா­தி­ப­திக்கு, மற்­றது மேயர்கள், பிர­தேச சபை தலை­வர்­க­ளுக்­குதான் இந்த அதி­காரம் உள்­ளது. அது அர­சி­ய­ல­மைப்பு சட்­டங்­க­ளிலும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே ஜனா­தி­ப­திக்கு அடுத்­த­தாக அதி­கா­ர­முள்ள இந்த உள்­ளூ­ராட்சி சபை­யினால் மக்­களின் தேவைகள் அறிந்து சேவைகள் செய்ய முடியும். இதனை 13 ஆம் திருத்­தமும் வலி­யு­றுத்­து­கின்­றது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யகா, ரண­சிங்க பிரே­ம­தாஸா ஆகியோர் உள்­ளூ­ராட்சி சபைளின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்தே நாட்டின் தலை­வர்­க­ளா­னார்கள்.
1970 களில் தேர்­தல்கள் நடத்­தப்­பட்டு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மையில் ஆட்சி அமைக்­கப்­பட்­ட­போ­திலும், அதன்­பின்னர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் நடத்­தப்­ப­ட­வில்லை. இதனால் மக்­களின் விருப்­புக்­களை அர­சாங்­கத்தால் அறிந்து கொள்ள முடி­யாது போனது. எனவே நாட்டில் தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும். அப்­போ­துதான் மக்­களின் விருப்பு என்ன என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளினால் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் எல்லை நிர்­ண­யங்­களை நேர்­மை­யா­கவும், சரி­யா­கவும் மேற்­கொள்­ள­வில்லை. இதனால் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் குழு அமைத்து இது தொடர்பில் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்டு புதிய எல்லை நிர்­ண­ய­னங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அடுத்த வருட ஆரம்­பத்தில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் நடத்­தப்­படும்.

தற்­போது பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபைகள் கலைக்­கப்­பட்டு விசேட ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் தத்­த­மது பிர­தே­சங்­களில் அர­சி­யல்­வா­திகள் இல்­லாத கார­ணத்­தினால் சேவைகள் நடை­பெ­று­வ­தில்­லை­யென மக்கள் ஆதங்கம் தெரி­விக்­கின்­றனர்.

எனவே இவ்­வா­றான உள்­ளூ­ராட்சி சபை­களில் ஆணை­யா­ளர்கள், அதி­கா­ரிகள், செயா­ல­ளார்கள் தமது திற­மையை வெளிப்­ப­டுத்தி மக்கள் சேவையை செய்து மக்­களின் ஆத­ர­வினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சில உள்­ளூ­ராட்சி சபை, மாகாண சபை உறுப்­பி­னர்கள், தலை­வர்கள் ஊழல்­மோ­ச­டிகள், கொலைகள், கொள்­ளைகள் மற்றும் கற்­ப­ழிப்­புக்­களில் ஈடு­பட்­டனர்.

தென்­மா­கா­ணத்தில் கடந்த ஆட்­சியின் போது எமது கட்­சியை சேர்ந்த உள்­ளூ­ராட்சி சபை தலை­வ­ரொ­ருவர் வெளி­நாட்­டுப்­பெண்னை கற்­ப­ழித்து அவ­ரது கண­வரை கொலை செய்தார். இச் சம்­ப­வத்­தின்­போது சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் என்ற ரீதியில் நானும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் என்ற ரீதியில் அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்­தவும் இத் தலை­வரை கட்­சி­யி­லி­ருந்தும், பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்­கான கடி­தத்தை அனுப்பி வைத்தோம்.
ஆனால் அன்­றைய கட்சி தலைவர் இந்த கடி­தங்­களை உடனே வாபஸ் பெறு­மாறு எமக்கு உத்­த­ர­விட்டார். இவ்­வாறு முன்­னைய தலைவர் பல மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எனக்கு ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வங்கள் தொடர்பில் புத்­த­க­மொன்றை எழுதிக் கொண்­டி­ருக்­கின்றேன். அதனை விரைவில் வெளியி­டுவேன். இங்கு இன்னொரு சம்பவத்தையும் கூற வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் நூறு பெண்களை கற்பழித்த பிரதேச சபை உறுப்பினரொருவர் அதனை விழாவாக கொண்டாடினார்.

எனவே பிரதமர் பதவிகிடைக்காததன் காரணமாகவே நான் கட்சியிலிருந்து வெளியேறினேன் எனக்கூறுவதில் உண்மையில்லை. மாறாக கொள்கை முரண்பாடுகள் காரணமாகவே நான் கட்சியிலிருந்து வெளியேறினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.