புலிகள் மீளவும் தலைதூக்க இடமளிக்கப்படாது – சிவஞானம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் தெற்கின் சிலர் போர் இடம்பெற உள்ளதாக கூறிய போதிலும் போர் அவர்களுக்கே தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்க எந்தவிதமான சந்தர்ப்பங்களும் வழங்கப்படாது.
அண்மையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கி தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.