Breaking News

போர்க்குற்ற விசாரணை: சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்கிறது கனடா



இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறையில், சர்வதேச நீதித்துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமானதென கனடா வலியுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் கனேடிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஹரி ஆனந்தசங்கரி, நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். இதன்போதே மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதி விசாரணை பொறிமுறையே நம்பகத்தன்மை வாய்ந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாகவும் அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இக்குழுவினர், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அத்தோடு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.