Breaking News

உணவை உட்கொள்ள மறுத்தார் நாமல்



நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நேற்று (திங்கட்கிழமை) இரவு சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை தவிர்த்துள்ளதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவதற்கு சிறைச்சாலை ஆணையாளரிடத்தில் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, நீதிமன்ற உத்தரவிற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் சில கைதிகளுடன், ஈ பிரிவிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.