Breaking News

பயங்கரவாதம் என்ற பெயரில் பழிவாங்கல்களும் இடம்பெற்றன; பிரதமர்

கடந்த காலத்தில் பயங்கரவாதம் என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தனிப்பட்ட கோபங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காணிப் பிரச்சினை, பணப் பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினைகள் இதற்கு சிறந்த உதாரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். 

எனினும் இவை அனைத்தும் கடந்த காலத்தின் சில பகுதிகள் என்றும், இவை தொடர்பில் மீண்டும் திரும்பிப் பார்ப்பதன் மூலம் நடந்தது என்ன என்பதை பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அவை எமது உணர்வுகளை அறிவதற்கு இருக்கும் ஒரே வழிமுறை என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது பிரதமர் கூறியுள்ளார்.