யாழ் பல்கலைகழகத்திற்கு மூன்று அமைச்சர்கள் விஜயம்
யாழ்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷ யாப்பா மற்றும் கருணாரத்ன பரணவிதான ஆகியோரே யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்னம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலவரையறையன்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








