“நாமலை கைது செய்தததால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே“ மஹிந்த
நாமல் ராஜபக்சவை கைது செய்தததால் அரசாங்கத்திற்கு மகிச்சி என்றால் தனக்கும் சந்தோஷமே என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தந்தையுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் நேற்யை திகம் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை பார்வையிடுவதற்காக நேற்றிரவு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா என்றே எனக்கு கேட்கத் தோனுகிறது. 18ஆம் திகதி வரை காத்திருப்போம் பிணைக்கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. அதன் பின்னர் நீதிமன்ற செயற்பாடுகள் பின்னர் சட்டத்தரணிகளிடம் இதனை ஒப்படைப்போம்.
அரசியல்வாதிகளே யாரை எப்பொழுது கைது செய்ய வேண்டுமென கூறுகின்றனர். எனினும் அதனைவிடவும் பெரிய வெற்றிகளை நீதிமன்றத்தினூடாக நாங்கள் பெற்றுள்ளோம். விமல் வீரவன்சவின் வற் வரி தொடர்பிலான வழக்கிற்கு தற்காலிகமாகவேணும் தீர்வு கிடைத்துள்ளது.
சட்டத்திற்கு முரண்பட்டு வற் வரி அமுல்படுத்தப்பட்டதால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அது மிகப்பெரிய வெற்றியே. அதுவே மகிழ்ச்சிக்குரிய விடயம். இது வேறுவொன்றுமல்ல. அரசியல் பழிவாங்களே. அவர்கள் அதனை தொடர்ந்து செய்கின்றனர். இது சாதாரண விடயமாகவே தற்போது தோன்றுகின்றது. இந்த கைது இடம்பெறுமென்று வற் வரி விதிப்பிற்கு தடை ஏற்படும்போதே எமக்குத் தெரியும்.“ எனக் குறிப்பிட்டார்.