Breaking News

நள்ளிரவு போராட்டத்தில் குதிக்கவுள்ள பல்கலை சமூகம்



மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வைத்தியர் அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து போதும், இதுவரை தமது கோரிக்கைகளுக்கு உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எவ்வித தீர்வையும் வழங்காத நிலையில், இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த காரணத்தால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். இன்று நள்ளிரவு முதல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள இப் போராட்டம், நாளை நண்பகலே நிறைவடையுமென தெரிவிக்கப்படுகிறது.