மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற விசாரணை அவசியம்: சம்பந்தன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவரிடையே நேற்று (வெள்ளிக்கிழமை) விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பக்கச்சாற்பற்ற விசாரணை வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஷேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விரைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபரைக் கோரியதோடு சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.