Breaking News

பொலி­ஸாரின் அத்­து­மீ­றிய செயற்­பாடே இரு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம்



யாழ்ப்­பா­ணத்தில் பொலிஸார் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டை­ய­டுத்து இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலி­யா­கி­யுள்­ளமை பெரும் கவ­லை­யளிக் கும் விட­ய­மாகும். பொலி­ஸாரின் அத்­து­ மீறிய இத்­த­கைய செயற்­பாடு குறித்து உரிய விசா­ரணை நடத்தி நீதி நிலை­நாட்­டப்­ப­ட வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான திரு­மதி விஜ­ய­க­லா­ம­கேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். 

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பில் கடும் கண்­டனம் தெரி­வித்து அறிக்­கை­யொன்றை வெ ளியிட்­டுள்ள அவர். அதில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளான நட­ராஜா கஜன், பவுண்ராஜ் சுலக்ட்சன் ஆகியோர் கொக்­குவில் குளப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் காங்­கே­சன்­துறை வீதியில் பொலி­ஸாரின் துப்­பாக்­கிச்­சூட்­டை­ய­டுத்து பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மா­னது பெரும் கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும். 

மோட்டார் சைக்­கிளில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பய­ணித்­த­போது பொலிஸார் தமது அத்­து­மீ­றிய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யி­னா­லேயே இந்த அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. மோட்டார் சைக்­கிளில் சென்ற பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை பொலிஸார் மறித்­த­போது அவர்கள் நிறுத்­தாமல் சென்­றி­ருந்தால் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

அவர்கள் யாரா­க­வி­ருந்­தாலும் துரத்­திச்­சென்று அவர்­களைப் பிடித்­தி­ருக்­கலாம். அல்­லது எச்­ச­ரிக்கை வேட்­டுக்­களை த்தீர்த்து அவர்­களை நிறுத்த முயற்­சித்­தி­ருக்­கலாம். இத­னை­வி­டுத்து அவர்கள் மீது பொலிஸார் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் மேற்­கொண்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­ப­டல்ல. இத்­த­கைய செயற்­பா­டா­னது பொலி­ஸாரின் அத்­து­மீ­றிய செயலை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

இந்த விட­யத்தில் உரி­ய­வி­சா­ரணை நடத்­தப்­பட்டு குற்­ற­மி­ழைத்­த­வர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இரண்டு அப்­பாவி உயிர்கள் பலி­யான இந்த விட­யத்தில் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

இந்த விடயம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவனத்திற்கு நான் கொண்டுவந்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். தமது பிள்ளைகளின் பிரிவால் துயருற்றிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபகங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.