சுமந்திரனின் அமிலச்சோதனை முடிவு வெளியாகியது(காணொளி)
ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படைகளில் உள்ள 99 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதைவைத்து சிறுபான்மை இனங்களின் நிலையை விளங்கிகொள்ள முடியும் என்றும், இந்த பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா, இன்று எதிர்கட்சி தலைவரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவைரை சந்தித்த போதே இந்தக் கருத்தை தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவிலுள்ள மக்கள் குழுக்கள் தமது இறையாண்மையை உபயோகிக்கும் வகையில், பேரினவாத ஆட்சிமுறை அற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை எதிர்கட்சித் தலைவர் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்