Breaking News

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூடு பட்டே மரணம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூடு பட்டே மரணம்
அடைந்துள்ளதாக உடல் பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களினதும் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக சுலக்சனின் தந்தையார் அங்கு சென்றுள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாணவர்களின் கொலைக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.