Breaking News

சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது (காணொளி)

வவுனியாவில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனின் படத்தை எரித்து இருக்கின்றார்கள்.  இது மிகமோசமான செயலாகும் யாரும் அவ்வாறு செய்யக்கூடாது என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுகதமிழ் நிகழ்வு இடம்பெறுவதை குழப்பும் நோக்கில் தமிழரசுக்கட்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் ஊர்வலத்தால் அங்கு இளைஞர்களிடையே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்ட மாட்டுப்பொங்கல் ஏற்பாட்டாளரான தமிழரசுக்கட்சி செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் பேசுகையில் சம்பந்தன் ஐயாவா காணாமல் ஆக்க செய்தார் அவர் அதனை செய்யவில்லை என்றும் அதனை செய்தவர்கள் வேறுநபர்கள் என்றும் அவர்கள் த.தே.கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இப்போதும் எங்களுடனேயே இருப்பதாகவும் ஐயா எவ்வளவு கஸ்டங்களை தாங்கிக்கொண்டு எங்களுக்காக செயற்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



தொடர்புடைய முன்னைய செய்தி

காலத்தின் தேவையாக எழுக தமிழ் போராடத் தயார் - சிறிதரன்


முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்