Breaking News

ஸ்ரீலங்கா அரசுக்கு விலையானதாக தமிழ்த் தலைமைகள் மீது குற்றச்சாட்டு - கபே

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமை களின் அற்ப விடயங்களுக்காக உ ள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட த்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்த ங்களைக் அமைந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் இடம்பெறப்போவதாக ஸ்ரீலங்காவின் பிரபல்யமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமானதும், நீதி யானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எச்சரித்துள்ளது. புலிகளின் தத்துவாசிரியராக இருந்த என்டன் பாலசிங்கம்  சரியானமுறையில் செயற்படுத்தியதாக  சுட்டிக்காட்டிய கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தத்துவாசிரியரான எம்.ஏ சுமந்திரன், நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விலையாகி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டியுள்ளார்

 பல மாதங்களாக இழுபறி நிலையிலிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டம் நேற்றைய முன் தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவெய்தியது.

 எனினும் இந்த திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் நிரூபித்த நிலையில் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் இந்தச் சட்டமூலத்திற்கு நேற்றுமுன் பச்சைகொடியை நீட்டியுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், குறைபாடுகளுடன்  சட்டம் நிறைவெய்தி யதாக அதிருப்தி தெரிவித்தவேளை, தமிழ்த் தலைமைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் விலையுள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளனர்.

“ஸ்ரீலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் வந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படப்பட்டுள்ளது.

இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றியமை க்கப்பட்டுள்ளது.

இவ் விகிதத்திற்குள் நுழைத்தமைக்கான   விடயம்

ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிர்ணயிப்பதற்கே அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஊர்யிதப்படுத்த முடியாமைக்கான காரணம் ஏற்பட்டது.

நாடாளுமன்றம் பிற்போடப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்ளானது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத பயன் ஒன்று கிடைப்பதற்கு.

இச் சட்டமூலத்திற்கு திருத்தங்கள் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்ற வழங்கப்பட்ட விலை உயர்ந்ததாகும். இதனால் வடக்கு, கிழக்கிலேயே அதிக அநீதி ஏற்படும் எனத் தெரிவிக்கின்றோம்.

அரசியல் கட்சிகளுக்கு தத்துவாசிரியர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்டன் பாலசிங்கம் இப்பதவியிலிருந்தார். ஆனால் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார்.

இது இனவாத அறிவிப்பல்ல. இந் நாட்டில் சட்டத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சட்டத்தை சரிவர நிறைவேற்றுவதாக குரல் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத்தில் இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கீழே கண்களுக்கு எவ்வாறு மண்ணைத்தூவுகிறது என்று ஆலோசனை வழங்குபவர்களாக காணப்படுகின்றனர்.