அரசியல் கைதிகள் விடயத்தில் த.தே.கூட்டமைப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடுத்துள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமை ப்பு தீவிரமாக நடவடிக்கை மேற்கொ ள்ள வேண்டுமென அரசியல் கைதிக ளின் உறவுகள் எச்சரித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினாகள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தமது மனுவில் குறித்த கோரிக்கையினை வவுனியா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட தமது வழக்கினை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாதெனவும் தங்களை மரண தண்டனைக் கைதிகளுடன் தடுத்து வைக்கக் கூடாதெனக் கோரியும் எமது உரித்துள்ள உறவினர் சிறைச்சாலை யில் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளாகவுள்ள உறவுகளின் உடல் நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதுடன் தொடர் உண்ணாவிரதத்தினால் அவ ர்களது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது.
எனவே தாங்கள் உண்ணாவிரதமருக்கும் பிள்ளைகள் விடயத்திலும் ஏனைய அரசியல் கைதிகள் விடயத்திலும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தங்களிடம் தயவுடன் கோரிக்கை வேண்டுகின்றோம்.
எமது உறவுகளின்; வழக்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டால் தமிழ் மொழியை மட்டுமே தெரிந்துள்ள அவர்கள் மொழி ரீதியில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
அரசியல் கைதிகளாகவுள்ள அவர்களது மொழி உரிமையைக் கூட நிலை நாட்டமுடியாது.
மேலும், சிங்களப் பகுதிகளுக்கு வழக்குகள் மாற்றப்பட்டால் அரசியல் கைதிகளாக உள்ள எமது உறவினர் சார்பாக வழக்கறிஞர்களையும் எம்மால் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
எனவே எமது பிள்ளைகளின் வழக்குகள் தமிழ் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி யை மேலும் மறுப்பதற்கான அரசின் மனிதாபிமானமற்ற உத்திகள் என்ப தனைத் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
பல வருடக்கணக்கில் எமது பிள்ளைகள் நீதிக்குப் புறம்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் வாயிலாக எமது பிள்ளைகளுக்கு விடுதலை கிட்டும் என இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளது.
ஆட்சி மாற்றத்தில் பங்காளிக் கட்சியாக பணியாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் 'மைத்திரியை வெல்ல வையுங்கள்' அதன் வாயிலாக எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றினையும் நம்பி வாக்களித்த நாம், எமது பிள்ளைகள் இன்று வரையில் விடுவிக்கப்படாமையினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
பதிவிக்கு வந்தவுடன், தெற்கு மக்களின் பிரச்சினைகளை சீக்கிரம்அணுகிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை உரியவாறு அணுகவில்லை.
அரசியல் கைதிகளின் மனிதாபிமான விடுதலையில் அரசாங்கம் காட்டிவரும் இழுத்தடிப்புக்கு எதிராக தாங்கள் தாமதமின்றி காத்திரமாக நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும், உரியவாறு தொடர்ச்சியான இடைவிடாத அழுத்தத்தினை கூட்ட மைப்பின் தலைமைத்துவம் அரசுக்குப் பிரயோகிக்கவும் கோருகின்றோம்.
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பு எம்மை வேதனைப்படுத்தியுள்ளது.
வாக்களித்த நீங்கள் எமது பிரச்சினையில் விட்டுக்கொடுப்பின்றி தீர்வை ப்பெற்றுத்தாருங்கள்.
ஏற்கனவே எம் சார்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தங்களுக்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளது.
எனினும் நீங்கள் அவற்றுக்கும் பதிலளிக்கவில்லையென அறிகின்றோம். எங்களது பிள்ளைகளை விடுவியுங்கள் என்பது எங்களின் ஓர் மனிதாபிமான கோரிக்கை.
அதற்காக தாங்கள் உரிய அழுத்தத்தினைப் பிரயோகித்தால் நிச்சயமாக தீர்வு கிட்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
எனவே இப்பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது விடுதலைக்காக ஏங்கும் எமது பிள்ளைகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது பிள்ளைகளின் கோரிக்கையினை உரியவாறு அணுகி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளான எமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்ற தாமதமின்றி நடவடிக்கை மேற்கொ ள்ளுங்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உரிய கவனம் எடுத்து அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்பட வேண்டுமென அரசியல் கைதிகளின் உறவி னர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.










