Breaking News

உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லங்கள் நிறை­வேறும் வாய்ப்புள்ளதாக !

மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை­க­ளுக்­கான திருத்தச் சட்­டங்கள் தொட ர்­பான விவாதம் பாரா­ளு­மன்றில் நாளை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன் அச்­சட்ட மூலங்கள் பெரும்­பாலும் நிறை­வே றும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற னவாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதே­போன்று 2018 ஆம் ஆண்­டுக்­கான உத்­தேச செல­வுகள், வர­வுகள் உள்­ளி ட்ட ஒதுக்­கீட்டு சட்­ட­மூலம் ஊட­கத்­துறை மற்றும் நிதி­ய­மைச்­ச­ரு­மான மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை பாரா­ளு­மன்றில் வழங்கப்படவுள்ளது. 

சாதா­ர­ண­மாக திங்­கட்­கி­ழ­மை­களில் பாரா­ளு­மன்றம் ஒன்­று­கூ­டு­வ­தி ல்லை. எனினும், மேற்­கூ­றிய விட­யங்­க­ளுக்­கா­கவே விசே­ட­மாக நாளை பாரா­ளு­மன்றம் ஒன்று கூட­வுள்­ளமை தெரிவிக்கக்கூடியது.

நாளை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள 2018 ஆம் ஆண்­டுக்­கான ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தின் அடிப்­ப­டையில் ஏற்­படும் துண்­டு­ விழும் தொகை­யினை எவ்­வாறு நிரப்­பு­வதென்ற  தொடர்பில் நவம் பர் 10 ஆம் திகதி நிதி­ய­மைச்­ச­ரினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு, செல­வுத்­திட்ட உரையில் விரிவுபடுத்தப்படும். 

நிதி­ய­மைச்­ச­ரினால் பாரா­ளு­மன்றில் வரவு, செல­வுத்­திட்ட உரை வழங்குவ தற்கு ஒரு மாதத்­துக்கு முன்னர் ஒதுக்­கீட்டு சட்டமூலம் பாராளு மன்றில் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே நாளை 2018 ஆம் ஆண்டு க்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.