Breaking News

ஆந்திர மாநில நதியில் விசைப்படகு கவிழ்ந்து 19 பேர் பலி !

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கிருஷ்ணா நதியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் விரைந்த படகு திடீரென கவிழ்ந்ததில் 19 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் உள்ள கிருஷ்ணா நதியில் தின ந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. 

நேற்று மாலை பவித்ர ஆரத்தியைக் காண ஆந்திர மாநில சுற்றுலாத் துறை யினர் ஏற்பாடு செய்திருந்தனர். விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம் பெர்ரி எனும் இடத்திற்கு சுற்றுலா  சென்றுள்ளனர்.

சிறிது தூரம் சென்றவுடன் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் பொலீஸார், மீனவர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். 

படகு கவிழ்ந்த விபத்தில் 19 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் "கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்தமைக்கு ஆழ்ந்த இரங்கல். 

இத் துயர சம்பவத்தில் தங்களின் வாழ்க்கையை இழந்தவர்களின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். மீட்புப் பணிகளில் ஆந்திர பிரதேச அரசும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.