மனித உரிமை மீறல் சார்பாக ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடு - ஐ.நாவில் ஆய்வு!
யுத்தக் குற்றங்கள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் முன்னெ டுக்கப்பட்ட சித்திரவதைகள் உட்பட மனித உரிமை மீறல்கள் விடயத்தி லும் பலவந்தமாக காணாமல் ஆக்க ப்பட்ட விடயங்கள் குறித்தும் ஸ்ரீல ங்கா அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் அடுத்தவாரம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆய்வுக்கு உள்வாங்கப்படவுள்ளன. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா குறித்த மீளாய்வு கூட்டத்தின் விசாரணைகள் புரூண்டி தென்கொரியா மற்றும் வெனிசூவேலா ஆகிய நாடுகளினால் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா குறித்த மீளாய்வுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழுவிற்கு தேசிய திட்ட ங்கள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமை ஏற்க வுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து ள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் தொடர்பான விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு பெற்று வழங்குவது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாதத் தடைச் சட்ட த்தை நீக்குவது, காணமல் போனோர் அலுவலகத்தை அமைத்தல் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல் ஆகிய விடையங்களில் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட முப்படையினராலும் பொலிசாராலும் தான்தோ ன்றித்தனமாக சட்டத்திற்கு முரணான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் குறி த்த அறிக்கைகளும் இவ் மீளாய்வுக் கலந்துரையாடலில் விசாரணைக்கு உட்ப டுத்தப்படவுள்ளன.
அதேவேளை இனவாத கருத்துக்கள் மற்றும் வன்முறைகள் குறித்த அறிக்கை களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. ஓரினச் சேர்க்கைகள் உட்பட பாலி யல் வன்கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அனைத்து பாலினங்களினதும் செயற்பாடுகள் விடயமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வுள்ளது.
மதங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சிறுபான்மையின சமூகங்களின் உரி மைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் பேணுவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள ப்படவுள்ளன.
இத்துறைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ள அறிக்கை மாத்திரமன்றி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் போன்றவை சமர்ப்பி த்துள்ள அறிக்கைகள் குறித்தும் நவம்பர் 15 ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெ றவுள்ள மீளாய்வுக் கூட்டத்தின் போது விசாரணைக்கு உட்படுத்தப்பட வுள்ளன.
இதற்கு முன்னர் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலமைகள் தொடர்பில் 2008 ஆம் ஆண்டும் 2012 ஆம் ஆண்டும் மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.