யாழ்.மாவட்டத்தில் தொடர் மழை : 2 ஆயிரத்து 518 குடும்பங்கள் அவலம்!
யாழ். மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரத்து 518 குடும்பங்க ளைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் இதுவரை பாதிப்படைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 4 வீடுகள் முழுமையாகவும் 159 வீடுகள் ஒரளளவிலும் பாதிப்படைந்து ள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் அறி விக்கையில் யாழ்ப்பாணக் குடா நாட்டில் தொடரும் மழை காரணமாக தற்போது 2 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் பாதிப்பி ற்குள்ளான மக்களின் வாழ்விடங்களும் சேதங்களுடன் காணப்படுகின்றது. குறித்த காலநிலை மேலும் தொடருமானால் தாழ்நிலப் பகுதி மக்கள் பலர் இடம்பெயரும் சூழலும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக உடுவிலில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 அங்கத்தவர்களும் ஊர்காவற்றுறையில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 137 அங்கத்தவர்களும் காரைநகரில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 அங்கத்தவர்களும் நல்லூரில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 அங்கத்தவர்களும் கோப்பாயில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சங்கானையில் 273 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 66 அங்க த்தவர்களும் சண்டிலிப்பாயில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 அங்கத்தவர்க ளும் பாதிப்படைந்துள்ளதோடு தெல்லிப்பழையில் 393 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 253 அங்கத்தவர்களும் சாவகச்சேரியில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் பருத்தித்துறையில் 283 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 45 அங்கத்த வர்களும் மருதங்கேணி. கூடிய பட்சமாக 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயி ரத்து 382 அங்கத்தவர்களும் இதுவரையில் பாதிப்பைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.