வவுனியாவில் இளைஞர் கைது முயற்சி-மக்களால் முறியடிப்பு!
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இளைஞனொருவரைத் துப்பாக்கி முனையில் கடத்த முற்பட்ட சம்பவம் பொதுமக்களால் தோற்கடிக்கப்ப ட்டுள்ளது.
வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியுடாக வாகனத்தில் பய ணித்த வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரு சொகுசு வாகனத்தில் பயணித்த குழு வினர் வழிமறித்து துப்பாக்கி முனை யில் கடத்த முற்பட்டவேளை, அவ்வி டத்துக்கு வந்த பொதுமக்களால் ஒரு குழுவினரும் அவர்கள் வந்த வாகனமும் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடத்த முயற்சித்தவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.