மகிந்தவின் நிகழ்விற்குச் சென்ற 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்ட 7 பேர் சன நெரிசலில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசா லையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்க ப்பட்டிருந்த பேரணி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை
அனுராதபுரம் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற பேரணியில் கலந்து கொண்ட வர்களில் 7 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பலர் மைதானத்திற்கு நுழைய முடியாமல் மைதானத்தில் வெளியே நிற்க வேண்டிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.