தமிழ் மக்கள் பேரவை வரலாற்றுத் தவறொன்றை இழைத்து விடக்கூடாது!
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியையோ அன்றி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பையோ வெறுக்கவில்லை அதிலுள்ள சில தலைவர்களின் போக்கு களையே வெறுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா விவரித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் 12வது கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்திலே நேற்றையதினம் ஞாயிற்று கிழமை நடைபெற்ற தன்போது இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார்.
தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் உணர்ச்சி மேலீட்டால் எடுக்கின்ற முடிவு கள் வலாற்று தவறாக அமைந்து விடும். மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படல் வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அறுபத்தேழாவது வருடங்களாக இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எமது தலை வர்கள் போராடியே வருகின்றார்கள் ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்றுப் போனதே வரலாறு எனத் தெரிவித்துள்ளார்.
பண்டா செல்வா ஒப்பந்தம் மேற்கொண்டார்கள் அது தோல்வியில் முடிந்ததுஇ டட்லி செல்வா ஒப்பந்தம் மேற்கொண்டார்கள் அதுவும் தோல்வியில் முடிந்ததுஇ தொடர்ந்தும்; இனப் பிரச்சினை தீர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தோ லங்கா ஒப்பந்தம் அதுவும் தோல்வியே என விவரித்துள்ளார்.
இன்று நடைபெற்று வருகின்ற அரசியலமைப்பு முயற்சிகளும் தோல்வியில் முடிகின்ற அறிகுறிகளே காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இவற்றையெல்லாம பார்க்கின்ற போது அவர்கள் முயற்சிகளை மேற்கொ ண்டே வந்திருக்கின்றார்கள்இ வந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் எடுத்த முயற்சிகளின் தோல்விகளுக்கு அவர்களது இயலாமை காரணமாக இருக்க லாம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அவர்களது இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையில் பலவீன ங்கள் இருக்கலாம். இவற்றை வைத்துக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கட்சியையோ கூட்டுக்கட்சிகளையோ புறந்தள்ளிவிட முடியாதெனத் தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் அவற்றை வழிப்படுத்தும் பலப்படுத்தும் செயற்பாட்டிலேயே தமிழ் மக்கள் பேரவை செயற்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார். மாறாக உணர்ச்சிகரமான எண்ணங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது வரலாற்றுத் தவறாக அமைந்துவிடும் எனவும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதே வரலாற்றுப் பதிவாக அமையும்.
இருக்கின்ற தமிழர் கட்சியைப் பலப்படுத்துவதை தவிர பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாதென விவரித்துள்ளார்.