Breaking News

தமிழீழத்தை கேட்டிடுவோம் என்றா உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கவில்லை- சிவசக்தி ஆனந்தன்!

தமிழீழத்தை கேட்டிடுவோமென நினைத்தா நாடாளுமன்றத்தில் உரையாற்ற எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் அனுமதிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக அண்மைக்காலமாக அவதூ றான சச்சைகள் முன்னெடுக்கப்படுவ தாக மாவை சேனாதிராஜாவும் குறி ப்பிட்டுள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திக்கொ ள்ளும் வகையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் இச் சந்திப்புக்கான அழைப்பை விடு த்திருந்ததுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள நான்கு பங்காளிக் கட்சிகள் மற்றும் மன்னார் மாறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் தலைமை யிலான பிரதிநிதிகள் இச் சந்திப்பில் கலந்துள்ளனர். 

அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற சம்பந்தன் அனுமதி மறுத்தமை தொடர்பில் அதிருப்தி வெளி யிட்ட சிவசக்தி ஆனந்தன் தமிழீழத்தையா கேட்கப் போகின்றோம் என வினாத் தொடுத்துள்ளார். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளை வேட்பா ளர்களாக நிறுத்தி அனைவரும் ஒன்றுமையாக செயற்பட்டால் தமிழ் மக்க ளின் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்றலாம் என ரொலோ எனப்படும் தமி ழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என் ஸ்ரீகாந்தா தெரிவித்து ள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக் –கட்சிக்கு எதிராக மாத்திரம் அண்மைக்காலமாக பல்வேறு அவதூறுகள் இட ம்பெறுவதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார்.