Breaking News

பேரறிவாளன் உடல்நலக்குறைவால் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை.!

ராஜீவ் கொலைவழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் திரு. பேரறிவாளன் அவர்களுக்கு, தமிழக அரசு அண்மையில் ஒரு மாத காலம் பரோல் என்னும் சிறைவிடுப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், பேரறிவாளன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு அளித்தது. இந்நிலையில், உடல் பரிசோதனை க்காகவும் சிறுநீர் தொற்று பிரச்ச னைக்கு சிகிச்சை அளிக்கவும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் பாதுகா ப்புடன் அழைத்துவரப்பட்டு, அனைத்து உடற்பரிசோதனையும் வழங்கப்ப ட்டுள்ளது. 

அதன் பின், மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட யாவரையும் நிரந்தரமாக விடுதலை செய்திட வேண்டுமென தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.