Breaking News

தீவிர முயற்சிக்காக ஐ.தே.க.பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்தது என்ன?

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பின்­ன­டைவை சந்­தித்­துள்ள நிலையில் அக்­கட்சி மத்­தியில் தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் கட்சி மட்­டத்தில் ஆராய்ந்து வரு­கின்­றது.


தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணை ந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் தேசிய அர­சாங்­க­மின்றி தனித்து அர­சாங்­கத்தை நிறு­வு­வது தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உயர் மட்­டத்­த­ரப்­பினர் ஆரா ய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் நேற்று முன்­தினம் மாலை ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நட த்­திய அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் இவ் விட­யத்தில் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வது தொட ர்­பிலும் விரி­வாக பேச்சு நடத்­தி­யுள்­ளனர். 

அதா­வது இந்தக் கூட்­டத்தில் 50 க்கும் மேற்­பட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் தனித்து ஆட்­சி­ய­மைக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­துள்­ளனர். இதனை செவி­ம­டுத்த பிர­தமர் இது குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேசு­வ­தாக அறி­வித்­த­துமன் நேற்று முன்­தினம் மாலை மஹ­கம்­சே­கர மாவத்­தையில் உள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். 

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் 20 நிமி­டங்கள் நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க விரும்­பு­வ­தாக பிர­தமர் ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்­பிட்­டுள்ளார். 

இதற்கு அப்­போது ஜனா­தி­பதி எந்தப் பதி­லையும் கூற­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன் பின்­னரே நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். இதன்­போது தேசிய அர­சாங்கம் நீடிக்­க­வேண்­டு­மானால் பிர­தமர் பதவி மாற்­றப்­ப­ட­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் ஜனா ­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். 

 இதன்­போது தான் சில தினங்­களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்­வ­தாக ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். அத­னை­டுத்து கூட்­டத்தை வெ ளியே வந்த சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­பதி சில தினங்­களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்­வ­தாக கூறி­யி­ருந்­தனர். 

இதே­வேளை நேற்று அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டி­ருந்த ஜனா­தி­பதி ஊடக பிரிவு ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­க­ளையும் எட்­ட­வில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இந­நி­லையில் இன்று மீண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர். 

இதன்­போது தேசிய அர­சாங்கம் தொடர்பில் தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னி­டையே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யிடம் தற்­போது 105 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே உள்­ளனர். ஆட்சி அமைப்­ப­தற்கு 113 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தேவைப்­ப­டு­கின்ற நிலையில் மேலும் 8 உறுப்­பி­னர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆராய்ந்து வரு­கின்­றது. 

இவ் விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து 8 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் இழுத்­தெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­கின்­றது. இது இவ்­வா­றி­ருக்க நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

இதன்­போதும் ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்சி அமைப்­பது தொட ர்பில் ஆரா­யப்­பட்­டிக்­கின்­றது. பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­களும் இதற்கு பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. இதே­வேளை நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

இதன்­போது தேர்தல் முடி­வுகள் தொடர்­பிலும் பின்­ன­டை­வுக்­கான காரணம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின்போதும் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவேண்டுமென கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்.  

அந்த வகையில் விரைவில் தேசிய அரசாங்கம் பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்குமெனத் தெரிகின்றது. மேலும் தமிழ் தேசி யக்கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.