Breaking News

பிணைமுறி குற்றச்சாட்டு உறுப்பினா்கள் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க ஆயத்தம்.!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்படும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கு முகம்கொடுக்க ஆயத்தமாக இருப்பதாக  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிப்பு.


இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகை யில்....,

தற்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயாராவே இருக்கின் றோம். ஊழல் மோசடி இல்லாமல் நாட்டை மாற்றும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். 

என்றாலும் அதிகாரதை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் சிலர் அரசாங்கத் துக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்துகின்றனர். விகாரை அமைப்பதற்கும் சர்வமத குழுவின் அனுமதி பெறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளாா். 

அவ்வாறான முறை ஒன்று இருப்பது எங்களுக்கு தெரியாது. மேலும் ராஜபக்ஷ் அரசாங்கம் 20 வருடங்களில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களைவிட பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் அதிகாரத்துக்கு வந்து 3வருடங்களில் மேற் கொண்டிருக்கின்றோம். 

என்றாலும் நாங்கள் அவற்றை விளம்பரப்படுத்தவில்லை. சிறிய வேலைத் திட்டங்களுக்கு பாரிய பதாதைகளை அமைக்கும் செயற்பாடுகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அத்துடன் 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. சிந்தித்துப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.