Breaking News

வடகிழக்கில் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை.!

வடக்கு – கிழக்­கில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மிகவும் அவசிய­மா­னது. உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த துரித நட­வ­டிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரிவித்துள்ளாா். 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற வடக்கு – கிழக்கை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான விசேட ஜனா­தி­பதி செய­ல­ணியின் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளாா். 

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கைகள் தாம­த­மாக நடை­பெ­று­கின்­றன. வடக்கு – கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் எவரும் இல்லை. இது தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்த வேண் டும். மேலும் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு கல்விச் சான்­றிதழ் இல்­லா­மை­யினால் தொழில்­ வாய்ப்­பைப் பெறு­வது நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளது. 

எனவே விசேட வர்த்­த­மா­னியினூடாக இவர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­பு­களை வழங்க நட­வ­டிக்கை எடு­க்க வேண்டும். வடக்கு – கிழக்கில் கைத்­தொழில் பேட்­டை­களை உரு­வாக்­கு­வது அவ­சியம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை ஏற்படுத்தி வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

மேலும் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி, வடக்கு – கிழக்கு பிர­தி ­நி­தி­க­ளுக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­வி­களை வழங்க நான் ஆயத்தமாக உள்ளேன். நீங்கள் பெயர்­களைப் கூறுங்கள். நான் நிய­மிக்­கின்றேன் என்றார். இதன்­போது அமைச்சர் மனோ கணேசன், நான் ஏற்க­னவே பகி­ரங்­க­மாக அறி­விப்­பு­களை வெளி­யிட்­டமை ஜனா­தி­ப­திக்குத் தெரி­யுமா என வினாவிய போது, ஆம் எனக்கு தெரியும் என ஜனா­தி­பதி தெரிவித்துள்ளாா். 

நான் அடிக்­கடி வடக்கு – கிழக்கு சென்று வரு­கின்றேன். அப்­போது அங்கு அரச அலு­வ­ல­கங்­க­ளிலும் தொழில் முயற்­சி­க­ளிலும் வடக்கு – கிழக்கு தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் கிடைக்­காமல் உள்­ள­மையைக் காண்­கின்றேன். வடக்கு – கிழக்கு சாரா­த­வர்­க­ளுக்கே தொழில்­ வாய்ப்­புகள் கிடைக்­கின்­றன. இது தொட­ர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு விசேட பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டு தொழில்­வாய்ப்­புகள் வழங்­கப்­பட வேண்டும் என்றார். இதன்­போது இந் நிலைமை குறித்து கவனம் எடுப்­ப­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கின்றார். மாவை எம்.பி. தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட மாவை சேனா­தி­ராஜா எம்.பி, வடக்கு – கிழக்கு காணிப் பிரச்­சினை தொடர்பில் நான் உங்­க­ளுக்கு மயி­லிட்டி நிகழ்வின் போது எடுத்­து­ரைத்­தி­ருந்தேன்.

எமது மக்­களின் காணி விடு­விப்பு மிகவும் முக்­கி­ய­மாகும் என்று குறிப்­பிட்டார். இதன்­போது குறுக்­கிட்ட ஜனா­தி­பதி, பாட­சாலைக் காணி­களோ அல்­லது கட்­ட­டங்­களோ இரா­ணு­வத்­திடம் இருந்தால் அவற்றை உடன் விடு­விக்க வேண்­டும் என்ற நிலை­ப்பாட்டில் நான் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.


இச் சந்­தர்ப்­பத்தில் கருத்து வெளி­யிட்ட அமைச்சர் சுவா­மி­நாதன் குறிப்­பி­டு­கை யில், கேப்­பா­ப்புலவு காணி விடு­விப்பில் நில­விய பிரச்­சி­னையைக் குறிப்­பிட வேண்டும். அக் காணி­களில் இரா­ணு­வத்தின் கட்­ட­டங்­களை அமைத்­துள்­ளனர்.

எனவே அவர்கள் அந்தக் கட்­ட­டங்­க­ளுக்­கான நிதியைக் கேட்­கின்­றனர். நிதிப் பிரச்­சி­னையே இங்கு பிர­தா­ன­மாக உள்­ளது என்றார். இதன்­போது கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மனோ கணேசன், இங்கு நிதிதான் பிரச்­சினை என்றால் அது தொடர்பில் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்­கலாம் அல்­லவா எனத் தெரி வித்துள்ளாா். 

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், சர­வ­ண­பவன், சிறி­யாணி விஜே­விக்­கி­ரம ஆகியோர் வடக்கு – கிழக்கில் போதைப்­பொருள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் கேரள கஞ்சா அதி­க­மாகக் கொண்டு வரப்­ப­டு­வ­தா­கவும் இது தொடர்பில் பொலி­ஸாரின் நட­வ­டிக்கை நிறைவா னதாக இல்லையெனவும் தெரிவித்துள்ளாா்.

இதன்­போது பொலிஸ் மா அதி­பரை பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பிய ஜனா­தி­பதி, இதற்கு உங்கள் பதில் என்ன என வினாவியபோது பொலிஸ்மா அதிபர் அதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, போதைப்­பொ­ருளை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரா­ணு­வமும் கடற்­ப­டையும் உத­வு­கின்­றன. ஆனால் ஒரு சில நட­வ­டிக்­கை­களைக் கொண்டு இவர்கள் பொலிஸார் மீது குற்றம் சுமத்துவதா கத் தெரிவித்துள்ளாா்.

இதன்­போது மீண்டும் கருத்து வெளி­யிட்ட சித்­தார்த்தன் எம்.பி. வடக்கின் வாள்­வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் பொலி ­ஸாரின் தொடர்­புள்­ள­தாக மக்கள் சந்­தே­கிப்­ப­தாக தெரிவித்துள்ளாா்.

மேலும் கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிக்கையில்,

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே நீர்த் திட்டங்களை முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளாா்.

அமைச்சர் ஹக்கீம் தமிழ், சிங்கள பிரதேசங்களை மறந்து விட்டதாகக் குறிப் பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், நிதி போதாமை காரணமா கவே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண் டிருந்த கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி. இவ்வாறான கூட்டங்களில் வாக்குறுதிகள் மட்டுமே நடைபெறு வதாகவும் அதிகாரிகள் எந்த நடவ டிக்கையையும் எடுப்பதில்லையெ னக் குற்றம் சுமத்தியதுடன் கூட்டத் தில் சலசலப்பு நடைபெற்றுள்ளது.