Breaking News

2020 வரை கூட்டரசாங்கம் இணைந்தே பயணிக்கும் - ரஞ்சித் மத்தும பண்டார.!

இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயமெனத் தெரி வித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். அது வரை கூட்டரசாங்கம் இணைந்தே பயணிக்குமெனத் தெரிவித்துள்ளாா். 

மேலும் எதிர்தரப்பினர் தம்மை பாது காத்துக் கொள்ளவே இடைக்கால அர சாங்கத்தை அமைக்க முயற்சிகளை முன்னெடுப்பதைத் தவிர பொதுநல நோக்கம் ஏதுமில்லை.

தற்போது கடந்த காலத்தில் நடை பெற்ற பல பாரிய மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் பலர் காணப்படு கின்றனர். வெகுவிரைவில் பலர் சட்டத் தின் முன்னிலையில் நிறுத்தப்படு வார்கள் எனத் தெரிவித்துள்ளாா்.