Breaking News

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக - ஜனாதிபதியுடன் அமைச்சர்கள்.!

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்தமைக்கான விடயத்தில் அமைச்சர் கள் மத்தும பண்டாரவும் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி  சேனவுடன் காரசாரமான பேச்சு வாா்த்தையில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

நேற்றைய அமைச்சரவை கூட்டத் தில் ஜனாதிபதியுடன் இரு சிரேஸ்ட அமைச்சர்களும் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் பொலிஸ்மா அதிபரின் திறமையின் மையாலேயே குற்றச்செயல்கள் அதி கரித்ததாக ஜனாதிபதி குற்றம் சுமத்தி யதைத் தொடர்ந்தே அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் பேச்சு வாா்த்தை நடாத்தியுள்ளனா்.

இருவரும் ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்துள்ளதுடன் புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன என தெரிவித் துள்ளனர்.

ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர்கள் உண்மையான நிலைமை மிகைப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள னர்.

இதேவேளை உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதிக்கு ஆதரவாக கருத்து வழங்கியதுடன் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகத் மேலும் தெரிவித்துள்ளாா்.