Breaking News

புதிய ஆளுநருக்கும் சம்பந்தனிற்குமிடையில் சந்திப்பு.! கூடவே சுமந்திரன்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிற்குமிடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பு கொழும்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவினால் வடமாகா ணத்திற்கான புதிய ஆளுநராக கலா நிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் ஆளுநராக நேற்று நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட அவர் முதலாவது சிநேகபூர்வ சந்திப்பாக இரா. சம்பந்தனை சந்தித்து கலந்து ரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார். இச் சந்திப்பு கொழும்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வாசஸ்தலத்தில் நடை பெற்றுள்ளது.