Breaking News

வாடகை வீடுகளில் குடியிருக்கும் சகாயபுரம் மீள்குடியேற்ற கிராம மக்கள் (காணொளி)

அடிப்படை வாழ்வாதாரமான வீடுகள் மறுக்கப்படுகின்ற நிலையில், வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களை மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர்.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட் பட்ட சகாயபுரம் கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 2009 ஆம் ஆண்டில் மீள்குடியேறிய 110 குடும் பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கிராமத்திற்கு வௌியில் உள்ளவர் களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த கிராம மக்க ளுக்கு வீட்டுத்திட்டங்கள் எட்டாக்கனி யாகவே இருந்து வருகின்றது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகள் வௌிக்கிராமங்களில் உள்ளவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாம் அவர்களின் வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நிலையே காணப்படுவதாக கிராம மக்கள் ஆதங்கங்களைத் தெரிவித்துள்ளனா்.

மக்கள் வீடுகளுக்காக போராடும் நிலையில், வௌிக்கிராமங்களில் உள்ளவர் களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றைக்காடாக கால்நடைகளின் இருப் பிடங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

போதைப்பொருளற்ற நாடு என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெறும் நிலையில், மதுபான உற்பத்தி மற்றும் போதைப்பொருள் பாவனையால் அச்சத்தில் உறைந்துள்ளனர் திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதே சபைக்குட் பட்ட தலைப்பையாறில் வாழும் பெற்றோர்.

எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டிய சிறார்கள் இளவயது திருமணத் தால் அடுப்பங்கரைக்குள் முடங்கும் நிலையும் இந்த கிராமத்தில் காணப்படு கின்றது.