Breaking News

பிரதம நீதியரசர் ஐ.நா-வின் விசேட பிரதிநிதி சந்திப்பு - பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு (காணொளி)

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்தித்தமையால் பாராளுமன்றத்திலும் வௌியிலும் விசேட பாா்வை திரும்பியுள்ளது. 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரத் திற்கான உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clément Nyaletsossi Voule நாட்டின் பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை சந்திப்பதற்கு மேற் கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (24) வாதப் பிரதி வாதம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளை சந்திப்பது தொடர்பான விடயங்களைக் குறிப்பிட்டு வௌி விவ கார அமைச்சிற்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றை சபையில் சமர்ப்பித்து எதிர்க் கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதனையடுத்து,

சபாநாயகரின் தலையீட்டில் மேல் நீதிமன்ற நீதிபதிகளுடனான சந்திப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், விசேட பிரதிநிதி பிரதம நீதியரசரை சந்தித்துள் ளார்.

பிரதம நீதியரசருடனான இச் சந்திப்பு தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்துக் கோரள பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார், சர்வதேச அமைப்பு மற்றும் நபர் களுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கையில்,

வெளிவிவகார அமைச்சூடாகவே அந்த விடயங்கள் இடம்பெறும். அவ்வாறு வருவோர் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. நீதிமன்றத்திற்கு எவ் வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படும்?

நீதிமன்ற தீர்ப்புகளும் தீர்மானங்களும் இங்கேயே எடுக்கப்படுகின்றன. எவ ரேனும் வருகின்றபோது, ஏதேனும் விடயங்கள் குறித்து அங்குமிங்குமிருந்து அறிந்துகொள்வதை விட, கிணற்றுக்கருகிலிருந்து பேசுவதைவிட சரியான ஒருவரிடம் வினவினால் விடயங்களைக் கூறுவார்.

விடயங்களைக் கூறுகின்றோமே தவிர, அவர்கள் கூறுபவற்றை நாம் முன்னெடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு கூறுவதும் இல்லை. நீதி அமைச்சர் இவ்வாறு கூறினாலும், பிரதம நீதியரசர் ஐ.நா-வின் பிரதி நிதியை சந்தித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா்.