Breaking News

எப்போதுமே கண்டிராத ராணுவ ஆட்சி நடைபெறும்! - சுமந்திரன் எச்சரிக்கை

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது. இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை தொகுதி செயற் பாட்டாளருக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற் றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மாற்று அணி எனத் தம்மைத் தெரிவிப்பவர்க ளால் குறைந்தது ஐந்து ஆசனத்தையா வது பெற முடியுமா எனவும், அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கிச் சிதைக்கின்றவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் ஓர் அரசிய் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக உழைத் தோம். அதை ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால் சிங்கள மக்களுக்கு எமது நியாயப் பாடுகளை தெளிவுபடுத்தவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயம்தானே எனச் சிங்கள மக்கள் உணரும் அளவுக்குத் தலைவர் சம்பந்தர் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற காலத்தில் செயற்பட்டார். 

அண்மையில் கஜேந்திரகுமார் பொன் னம்பலத்திடம் ஓர் ஆஸ்திரேலியா ஊடகம் ஒரு கேள்வியைக் கேட்டது. சுமந்திரன் மட்டும்தான் சிங்கள மக்களிடம் தமது கருத்துக்களைச் சொல்கிறார், உங்கள் கட்சி சார்பில் ஏன் இதனைச் செய்ய வில்லை என்று. அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு மூன்று மொழி களும் தெரியும், தமிழ்த் தேசியக் கூட் மைப்பு எம்.பியாக இருக்கின்றபோது அதனைச் செய்திருக்கின்றோம் என்றும் கூறினார். தற்போது எமது கட்சியில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார். அவர் அதனைச் செய்வார் என்றும் சொன்னார். 

ஆயுதம் ஏந்திப் போராடாத நான் அதனைச் சொல்லி வாக்கைப் பெறுவது அவர்களது தியாகத்தையும் போராட்டத் தையும் கொச்சைப்படுத்தும் செயல். மக் களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இங்கே பேசுவதை சிங்கள மக்கள் மத்தியிலும் பேச வேண்டும் - என்றார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்றுப் பிற் பகல் 3:30 மணிக்கு வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண் டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம் பெற்றது. 

இதில் தமிழரசு கட்சி வேட்பாளர்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமி ழரசுக் கட்சி நிர்வாகிகள், செயற்பாட்டா ளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் ச.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டனர். இதில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் களான மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், த.தபேந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், இ.ஆனோல்ட், திருமதி சசிகலா ரவிராஜ் ஆகியோர் உரை நிகழ்த் தினர்.