Breaking News

குமார் சங்கக்கார விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஆஜர்!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு அவர் விளையாட்டு மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

தொடர்புடைய ஏனைய செய்திகள் ;