Breaking News

MS Dhoni: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!


இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து கடந்த ஓராண்டாகவே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்துள்ளார். இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு (ஆகஸ்ட் 15) 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்" என்று தோனி தெரிவித்துள்ளார்.