Breaking News

கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வைக் காணலாம்! ராஜித கூறுகிறார்

நல்­லாட்சி மாற்­றத்தின் போது உத­வி­ய­வர்­க­ளுடன் அர­சியல் தீர்­விலும் ஒன்­றாக பேசி தீர்­வு­காண்­பது இல­கு­வான காரி­ய­மாகும். நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு வார்த்தை நடத்தி தீர்வு காண தயா­ராக உள்ளோம் என சுகா­தா­ர­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

மின்­சாரக் கதிரை கதை­களை கூறி மக்­களை ஏமாற்­றிய மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு இறு­தியில் ஆட்சிக் கதி­ரையும் இல்­லாமல் போய்­விட்­டது. எனினும் மஹிந்­த­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் ஒரு கதி­ரையை வழங்­கி­யுள்ளோம் எனவும் அவர் குறி­பிட்டார்.

அர­சியல் தீர்வு தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றாக அமையும் என்­பது தொடர்­பிலும் உள்­ளக பொறி­முறை விவ­காரம் தொடர்­பாக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் தெரிவிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மின்­சாரக் கதிரை கதைகள் எல்லாம் இப்­போது முடி­வுக்கு வந்­து­விட்­டன. மின்­சாரக் கதிரை கதை­களை கூறி மக்­களை ஏமாற்­றிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு இறு­தியில் ஆட்சிக் கதி­ரையும் இல்­லாமல் போய்­விட்­டது. அரச கதி­ரையில் நிரந்­த­ர­மாக இருக்­க­வேண்டும் என்ற ஆசையில் தான் அன்று மஹிந்த மின்­சாரக் கதி­ரையை பற்றி பேசிக்­கொண்டி இருந்தார். ஆனால் இப்­போது இரண்டு கதி­ரை­களும் அவ­ருக்கு இல்­லாமல் போய்­விட்­டன. அதனால் தான் அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்தில் ஒரு கதி­ரையை வழங்­கி­யுள்ளோம். இந்தக் கதிரை உறு­தி­யா­னது. மக்கள் மத்­தியில் நல்ல விட­யங்­களை கொண்டு சென்றால், நாட்­டுக்கு நன்­மை­ய­ளிக்கும் விட­யங்­களை செய்தால் இந்தக் கதி­ரையை தொடர்ந்தும் தக்­க­வைத்­துக்­கொள்ள முடியும்.

ஒரு கட்­டத்தில் தன்னை சரி­யாக பலப்­ப­டுத்­திக்­கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ யுத்­தத்தை வெற்றி கொண்ட தலை­வ­ரானார். அதன் பின்னர் தனது குடும்­பத்தை மட்­டுமே அர­சி­யலில் நிலைப்­ப­டுத்த வேண்டும் எனற எண்ணம் வந்த பின்­னரே முழு­மை­யாக தனது அதி­கா­ரங்­களை இழக்க நேரிட்­டது. மக்­களின் எதிர்­பார்ப்பும் ஆத­ரவும் ஒரு கட்டம் வரையில் தான் கைகொ­டுக்கும். எல்லை மீறி போகும்­போது மக்­க­ளி­னா­லேயே சாம்­ரா­ஜியம் வீழ்த்­தப்­படும். உலகில் பல தலை­வர்கள் அவ்­வாறு மக்­க­ளி­னா­லேயே வீழ்த்­தப்­பட்­டனர். அதே நிலை­மைதான் இன்று மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஏற்­பட்­டுள்­ளது. இதை அனைத்து தலை­வர்­களும் மனதில் வைத்­துக்­கொண்டு தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

மேலும் அன்று யுத்தம் முடி­வுக்கு வந்­த­போதே யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் அழுத்­தங்கள் ஏற்­படும் எனவும் அதற்கு தயா­ராக வேண்டும் என முதலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நான்தான் சொன்னேன். ஆகவே யுத்­தத்தின் பின்­ன­ரான செயற்­பா­டு­களை ஜன­நா­யக ரீதியில் மூவின மக்­களும் அனு­ப­விக்கும் வகையில் கையா­ளும்­ப­டியும் நாம் தெரி­வித்தோம். ஆனால் எமது ஆலோ­ச­னை­களை மஹிந்த கவ­னத்தில் கொள்­ள­வில்லை. தனது சர்­வா­தி­கார போக்கின் விளைவு இறு­தியில் அவரை அதி­கா­ர­மில்­லாத தலை­வ­னாக மாற்றும் நிலை­மைக்கு கொண்­டு­வந்து விட்­டது. இவை அனைத்­தையும் நல்ல உதா­ர­ணங்­க­ளாக கொள்ள வேண்டும்.

மேலும் அன்று எமக்கு இருந்த அழுத்­தங்கள் இன்று இல்லை. இன்று நாம் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­க­ளுடன் இணைந்து நாட்டை முன்­னெ­டுத்து செல்­கின்றோம். அதேபோல் இரா­ணுவம் மீதான குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் எமது பொறி­மு­றை­களின் மூலம் கையாள்­வ­தற்­கான வாய்ப்­புகள் கிடைத்­துள்­ளன. அத்­தோடு அதி­க­ள­வான உள்­ளக பொறி­மு­றை­களை கையாண்டு இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வைப்­புகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவை எதுவும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இருக்­க­வில்லை. ஆகவே சர்­வ­தேச சக்­தி­களை வென்­றதே எமக்கு கிடைத்­துள்ள மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

அதேபோல் இப்­போது அதி­கார மட்­டத்தில் எந்த சிக்­கலும் இல்லை. ஆனால் தீர்க்­க­வேண்­டிய முக்­கிய பிரச்­சி­னைகள் சில உள்­ளன. குறிப்­பாக அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்­வுக்­கான வேண்டும். அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணு­வதன் மூல­மாக ஏனைய அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கண்­டு­வி­டலாம். ஆகவே அது தொடர்பில் அக்­கறை செலுத்த வேண்டும்.

மேலும் இப்­போது அர­சாங்­கத்­துக்கும் எதிர்­கட்­சிக்கும் இடையில் நல்ல புரிந்­து­ணர்வு நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு கட்­டத்தில் நல்­லாட்­சியை அமைப்பதில் அவர்களது பங்கும் இருந்தது. அதே போல் ஒரு இனத்தை முழுமையாக பிரதிநித்துவப் படுத்தும் கட்சியாக அவர்களின் நிலைப்பாட்டுடன் நாமும் இணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே அவற்றை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம். நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தயாராக உள்ளோம் என்றார்.