Breaking News

பௌத்தமாக மாற்றப்படும் இந்துமத அடையாளங்கள் : மனோ ஆதங்கம்



தொன்றுதொட்டு இந்து மத அடையாளங்களாக காணப்பட்டு வந்த பல விடயங்கள், இன்று திட்டமிட்ட வகையில் சிறிது சிறிதாக பௌத்த மத அடையாளங்களாக மாற்றப்பட்டு வருவதாக, அமைச்சர் மனோ கணேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைர விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக இராவணன் தனது தாயை நினைத்து அமைத்ததாக கருதப்படும் கண்ணியா வெந்நீர் ஊற்று ஆக்கிரமிக்கப்பட்டு, தேசிய அகழ்வாராய்ச்சி நிலையத்தால் பௌத்த தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கதிர்காமத்திலும் இந்துத் தன்மை களவாடப்பட்டுள்ளதென குறிப்பிட்டதோடு, திருக்கேதீஸ்வரத்திற்கு முன்பாக தற்போது பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் சுட்டிக்காட்டினார்.