Breaking News

குரே, நிலுக்கா நியமனத்திற்கு ஐ.தே.க. எதிர்ப்பு.!

முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே, நிலுக்கா ஏக்கநாயக்காவிற்கு அரச கூட்டுத்தாபனங்களின்; தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜி னோல்ட் குரேயை தேசிய இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதி காரசபையின் தலைவராக சிறிசேன நியமித் துள்ளார் முன்னாள் சப்ரஹ முவ மாகாண ஆளுநரான நிலுக்கா ஏக்கநாயக்கவை அரசமரக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார்.

ஜனாதிபதி சமீபத்தில் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப் படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளன ஐ.தே.க வட்டாரங்கள்.

இரு ஆளுநர்களுக்கும் அந்த தகுதி இல்லையெனத் தெரிவித்துள்ளன சமீபத் தில் அனைத்து கூட்டுத்தாபனங்களினதும் தலைவர்களின் தகமை தொடர்பில் ஆராய்வதற்காக தனது செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்தி ருந்த ஜனாதிபதி கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார் என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது நியமனங்களிற்கு ஜனாதிபதி வேறு விதிமுறைகளை பின்பற்றுகின்றார் என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தனது உத்தரவையே மீறியுள்ளார் இது அரசியலிற்கான சதாப்சம் எனத் தெரிவித்துள்ளனா்.