Breaking News

தனி ஈழம் எய்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயலலிதா

இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டார். 

அவர் வெளியிட்டு வைத்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது என்று த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

அத்துடன் தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியே யும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.