Breaking News

பாத யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

மஹிந்த அணியின் அரச எதிரப்பு பாத யாத்திரையில் பங்குபற்றிய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரகட்சியின் பொதுச்செ யலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நீர்கொழும்பு பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பதவி ஆசைக்காகவே பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பேரணிக்கு சுதந்திரகட்சியின் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே கட்சியின் உத்தரவையும் மீறி பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் அதற்குரிய நாள் நெருங்கி விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உத்தரவையும் மீறி அரச எதிர்ப்பு பேரணியில் களமிறங்கிய உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு சுதந்திரகட்சியின் மத்தியகுழு கூட்டம் கட்சியின் தலைவரான ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.