Breaking News

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் பலி



யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்சன் என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் உயிரிழந்துள்ளனர்.