Breaking News

சிறீதரனின் ”கள்ளு” பிரச்சினையும் சந்திக்கு வந்தது (காணொளி)

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் தொட ராக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்க ளுக்கு இடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வரு கின்றன. 

இதன் ஒரு கட்டமாக தமிழரசுக்கட்சி யின் கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணத்துக்கும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதர னுக்கும் இடையிலான பிணக்கு வலுவடைந்துள்ளது. 

மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்திருந்த நிலையில், அவசரமாக ஊடகவியலாளர்களை சந்தித்த மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம், பாடசாலைக் காலங்களில் சிவஞானம் சிறீதரன் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கருத்துக்களை வெளி யிட்டிருக்கின்றார். 

இதன் ஒரு பகுதியாக பாடசாலை ஒன்றில் சி.சிறீதரனும் இன்னொரு ஆசிரியரும் செய்ததாகத் தெரிவித்த ஒரு சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.