Breaking News

2016- புத்தாண்டு இராசி பலன்- விருச்சிக ராசி


இந்த ஆண்டில் 2016 ஆகஸ்டு மாதம் வரை

குரு 10-மிடத்திலும், அதன்பிறகு குரு 11-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 10-மிடத்திலும், கேது 4-மிடத்திலும், சனி ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த ஆண்டு , ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.

2016 ஆகஸ்டு மாதம் வரை குருவின் 10-மிட சஞ்சரத்தின்போது வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம் ரிப்பேர் செலவு வரும் . வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப் பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். 

எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும் ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. பூர்வீகச் சொத்தில் இழுபறி நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும். குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். அடக்கி வாசித்தால் மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம். 

குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. 10-மிட குரு, தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனைதோன்றும்.

2016 ஆகஸ்டு மாதம் வரை நடைபெரும் குருவின் 10-மிட சஞ்சரத்தின்போது வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம் ரிப்பேர் செலவு வரும் . வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப் பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும் ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. 

பூர்வீகச் சொத்தில் இழுபறி நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும். குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். அடக்கி வாசித்தால் மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. 

10-மிட குரு, தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனைதோன்இந்த வருடம் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் முதல் கட்டமாகும். 

 இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம். மான பனக்ம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செலல் வேண்டியிருக்கும்

இனி , 2016 ஆகஸ்டு மாதம் முதல் குருபகவான் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அதாவது உங்களுடைய லாப ஸ்தானமான 11-ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். ஏற்கெனவே சொல்லியபடி, குருபகவான் உங்களுக்கு நன்மை தரும் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து, அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். 

முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம் தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும். 

 குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள், தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை செய்து மன நிறைவைப் பெறுவீர்கள். இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்கள் யாவுமே நல்லவிதமாக நிகழும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும். பண வரவு ஏற்பட்டு பல வழிகளிலிருந்தும் ஆதாயம் கிடைக்கும். 

தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிக் கொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

 வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

சனி உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான். உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.












இவரே தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும். தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும். 

இது 7 1/2 ச் சனியில் மிகவும் கொடுமை செய்யும் ஜென்ம சனிக்காலமாகும். நடு 21/2 வருஷமாகும். ஆயுர்த்தாயம் நிறைவும், சமீபத்து 7 1/2ச் சனியும் ஜென்ம சனியாய் அமைந்துவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம். பெண்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் விழுவதால், கணவர் உங்கள் பேச்சை மீறியோ அல்லது உங்கள் கருத்துக்கு மாறாகவோ செயல்படுவார். இருவரிடமும் நெருக்கம் குறைவதோடு தேவையற்ற சணடை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு புகுந்த வீட்டாரிடமிருந்து தொல்லைகள் உண்டாகும். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் கணவர் செயல்படுவார். 

உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்பு மற்றும் குடும்பப் பற்றை உங்கள் கணவரும் உங்கள் புகுந்த வீட்டாரும் அலட்சியம் செய்வதோடு, வீண் பழிக்கும் நீங்கள் ஆளாக நேரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற நற்பெயரோ அல்லது பாராட்டோ கிடைக்காது. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கூட கிடைக்காது. உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் கௌரவ பாதிப்போ அல்லது ஆண் ஊழியர்களால், சில வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளும் தொந்தரவுகளும்கூட ஏற்படும். 

எனவே அவர்களுடன் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது. இததகைய பாதிப்புகள் பயண காலமாகிய 2 வருடம் 2 மாதங்களில் கடைசி ஓராண்டுக்கு அதாவது குரு 10-மிடம் செல்லும்போது ஏறப்டும். தற்போது 2015 ஜூலை வரை குரு மற்றும் ராகுவின் சாதகமான சஞ்சாரங்களால், சனியின் தொல்லைகள் மிதமாகவே இருக்கும். என்வே ஆரம்ப காலத்தில் இதைப்பற்றிய பயம் வேண்டாம். மாணவர்களுக்கு சனியின் மாற்றம் உங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை குரு மற்றும் ராகுவின் அனுகூலமான சஞ்சாரம் சனியின் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தினால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்க ஏதுவாகிறது. 

 இந்த குரு மற்றும் ராகுவின் சஞ்சாரம் உங்களை ஒருவகையில் ஊக்குவித்து உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறது. மிகவும் கவனத்தோடும் அக்கறையோடும் படித்தால், உங்களின் அதிர்ஷ்டம் உங்களுடன் கைகோர்த்து வரும் .மேலும் நீங்கள் முயன்று படித்தால், நீங்கள் நினைப்பதைவிட அதிக மதிப்பெண்கள் பெறவும், விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுகக்வும் முடியும். இந்த சாதகமான நிலை ஆண்டு முழுவதும் 2015 ஜூலை வரை உங்களுக்கு சாத்தியமாகும். அதன் பின் சனியின் பாதிப்பு அதிகமாகும். அதற்கு குருவின் 10-மிட சஞ்சாரம் துணை புரியும். 

உடன் படிக்கும் சாக் மாணவர்கள் உங்களின் முயற்சிக்கு பனக்ம் விளைவிக்கும் நோக்கோடு உங்களின் கவனத்தைப் பல வழிகளிலும் திசை திருப்புவார்கள். அதைப்போல ஜெனம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு உடல் அசதியையும் மன அழுத்தத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும். எனவே முதல் ஒரு ஆண்டுக்கு நீங்க்ள் நினைத்தவற்றை சாதிக்க முடியும் .ஆனால், அத்ன்பிறகு, நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது. இருப்பினும் சென்ற முறை இருந்துவந்த வீண் அலைச்சலும் மற்றும் அவப் பெயர்களும் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும். மேலும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க நினைத்த சில அரிய விஷயங்கள் எளிதில் நிறைவேற இந்த சனிப் பெயர்ச்சி மற்றும் தற்போதைய குரு ராகுவின் அனுகூலமான சஞ்சாரம் ஜூலை 2015 வரை ஓரளவு பயன் தரும். இச்சமயத்தில் பொருளாதாரத் துறையில் நீங்கள் திருப்தியோடு செயலாற்றலாம். சிலருக்கு ஆண்டு இறுதிவரை திருப்திகரமான நிலை தொடரலாம். மேலும் உங்களுக்கு கீழுள்ள அல்லது உங்களையே நம்பியுள்ள உங்களைச் சார்ந்தவருக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக பொருளாதார உதவி செய்ய இந்த கிரக நிலையானது சாதகமாக உள்ளது. உங்களின் நியாயமான கோரிக்கை அல்லது விருப்பங்கள் பூர்த்தியாகும்.

இந்த வருடம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான சிம்ம ராசியிலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான மீன ராசியிலும் இடம் பெயர்கிறார்கள் . இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10 ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள்.

 தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். 

அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.

சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.

இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். 

உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏறப்டும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். 

உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வெள்ளிக் கிழமைகளில் மகாலஷ்மியின் கோவிலுக்குச் சென்று சிவப்பு மலர்களால் ஏச்சிக்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்,வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது. கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம் நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.

புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

அனைத்து இராசிகளுக்கும்.
மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்
தனுசுமகரம்கும்பம்மீனம்