Breaking News

புத்தாண்டு இராசி பலன்கள் 2016- மிதுன ராசி

இந்த 2016ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 3-ம்
இடத்திலும் கேது உங்கள் 9-ம் இடத்திலும் சனி உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும், குரு ஆகஸ்டு மாதம் வரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்திலும் 2016 ஆகஸ்டு மாதம் முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

சனி பகவான் , உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும். 

இது யோக காலமாகவெ நடக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும். நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம். பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.

அரசியல்வாதிகள், பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.

மாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். 

மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும். பெண்களுக்கு சாதகமாகவே அனைத்தும் நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். 

மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அலல்து நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.

இந்த வருடம் ஆகஸ்டு மாதம் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். 

அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். 

உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும் பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு, கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். 

அது ஒரு நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.

பலவித பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. 

எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள் பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள் வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். 

சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள் அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.

2016 ஆகஸ்டு மாதத்துக்குப் பின், குருவின் 4 மிட சஞ்சாரம் சரியில்லை என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். 

முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.


இந்த வருட்ம் ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ராகு ப்கவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். 

உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். அந்தப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட , அந்தப் பயணங்களால் உங்களூக்கு பல நன்மைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வெற்றிகளும் உண்டாகும்.

செய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 

அதுபோல புதிய அரசியல்வாதிகள், ,பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அது உங்கள் வாழ்ககை முன்னேற்றத்துக்கு பல வழியில் உதவும். இந்த சமயத்தில் நீங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றியடைவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தவர்கள் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவார்கள். மேலும் சிலர் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். 

அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய அதிகாரமும் பொறுப்புகளும் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வுறுவர். சிலருக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகி அதன்மூலம் புகழடைவர். கலையுலகில் இவர்களுக்கான ஒரு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இவர்களுடைய திறமை வெளி உலகுக்கு தெரியும் காலம் இது. இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும்.

சகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து உங்கள் கைக்கு வந்து சேரும். இதுவரை தாமதப்பட்டு வந்த நல்ல காரியங்கள் இப்போது தடையின்றி நடக்கும்.

ராகு பகவான் தனது 3-ம் பார்வையாக உங்கள் 11-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பயனாக புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருமணத்திலும் நல்ல நிலையை அடைவார்கள். குலதெய்வ வழிபாடினைத் தொடர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் பயனாக உங்கள் முகத்தில் பொலிவு கூடும். மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மனக்கவலை நீங்கும். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.

இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்ககை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். வேதாந்த எண்ணங்களும் உயரிய சிந்தனைகளும் உருவாகும். தந்தையின் உடல்நலமும் நீங்கள் அக்கறை காட்டும் பெரியவர்களின் உடல்நலமும் பாதிப்படையலாம். 

சிலருக்கு தடைபட்டுப்போன குலதெய்வ வழிபாடு நல்லபடியாக நடைபெறும். மனம் ஞான விஷயங்களில் நாட்டம் கொள்ளும். கோவில்களிலும், மடங்களிலும் உயர் பதவிகள் கிடைக்கும். தர்மம், நீதி நிலைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். ஞானிகள் ,பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்கள் திறமையை இப்போது பலரும் தெரிந்துகொண்டு பாராட்டுவர். வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான செல்வத்தைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதைப் பெரிதாக நினைப்பீர்கள். வாழ்க்கையில் பலவித வசதிகள் கிடைத்தாலும்கூட அவற்றை ஒரு நியதிக்கு உட்பட்டே அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரம் காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.

கேது பகவான் 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். மருத்துவச் செலவு கூடும். கேது பகவானின் 11-ம் பார்வை உங்கள் 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப்படையலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் சில நன்மைகளும் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் அமையும்.

சிலருக்கு சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்து வந்து சேரும். பயணங்களால் லாபகரமான பலன்களே கிடைக்கும். தாய் தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம். மருத்துவச் செலவு கூடும்.அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-








பரிகாரம்:

குருவின் சஞ்சாரங்கள் நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். கேது சஞ்சாரமும் சரியில்லாததால், வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும். வெள்ளிக் கிழமைகளில், மகாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வழிபடவும்.